Wednesday, June 26, 2019

புராண கதை ஒன்று ...






 "மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்... " -

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம், சிங்க முகம்... மனித உடல்... - இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.

இதைப் பார்த்தார்களோ இல்லையோ... -இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.

இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.

அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை . மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை . முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், "" என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.

பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? ' ' என்றார்.

அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. ""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன், அதற்காகத்தான் மன்னிப்பு, " - என்றார் .

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது

""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், ' ' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன், "ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது , ' ' என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்,

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு ! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது -

பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

*இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது ! ஆசை வேண்டாம் என்கிறானே! " ஆனாலும், அவர் விடவில்லை . விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், ,

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன்,

""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான்.

நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல ! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர் , " என்றார்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள் ...





        அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் திரு.ருஜுதா திவேகர் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள   இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ் (Indian super foods) புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே.

☘உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? சுத்தமாக   அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, “அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட். எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள்.அளவாண   அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.☘

☘நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.*
நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.☘

☘தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை.☘

☘தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி.☘

☘பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.☘

☘கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.☘

☘தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு.☘

☘முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.☘

 ☘குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.☘

 ☘நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். ☘

☘வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். ☘

☘இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.☘

☘சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்☘

☘பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும்.☘

 ☘ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.☘

 ☘சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.☘

 ☘உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான்.☘

அர்த்த சாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!








ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், கணவன் / மனைவியை நோய்வாய்ப் படும்போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டே சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம் ஆனால் நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

அழகு, ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

கஞ்சனுக்கு பிச்சைக்காரன் எதிரி ஆவான், அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரணநிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும். கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலையானது சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.

தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அவை கஷ்டப்பட்டு தேடிய தேனை தானே உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

அண்டம் பிண்டம் தத்துவம்.







அண்டத்துல இருக்கறதுதான் பிண்டத்துல இருக்குதாம்

நாம பொதுவாக ... வெளியில போறப்ப ... வெள்ளை வெளேர்'னு ... வெளிநாட்டு ஆளுங்க போனாக்க ... அதில யாரு மேத்யூ ஹெய்டன், கிரேக் வொயிட் யாரு ... ஆண்ட்ரூ ஹேமிங்டன் யாரு'னு கண்டுபுடிக்கசொல ... போதும் போதும்னு ஆயிப்போயிரும்

இதில பழைய ஆளுங்க அண்டத்துல உள்ளத கூரு போட்டு ஆராஞ்சி ... பொறவு பிண்டத்துல உள்ளத பிரிச்சி போட்டு ஆராஞ்சி ... பொடக்கால ... ரெண்டுத்தையும் ஒப்புமை பண்ணி ... இங்ஙன உள்ளதுதேங் அங்ஙனயிம் இருக்கதூ'னு சொல்லிவுட்டாங்களாம்

செவுத்துக்கு அந்தாண்ட நின்னுகிட்டு ஒரு சின்ன ஓட்டையில காலு நகத்தை மட்டும் நீட்டின ராணியோட ... நகத்தை மட்டுமே பாத்துபுட்டு ... மொத்த உருவத்தையும் வரைஞ்சி ராசாகிட் அப்ளாஸ் வாங்குன ஓவியரைப் பத்தி படிக்கசொல ... புல்லரிச்சிப் போயிடுது

ஒரே ஒரு எலைய மட்டும் கையில வச்சிக்கிட்டு ... மரத்தோட வயசென்ன ... எத்தனை எலைங்க ... அந்த மரத்துல ஒட்டு மொத்தமா இருக்கு ! ... அதையும் சொல்லிப்புடுவாங்க ...
தலையில உள்ள ஒரு முடிய வச்சிக் கிட்டு ... அந்த ஆளோட மொத்த சரித்திரத்தை சொல்லிப்புடறதும், சாமுத்திரிகா லட்சணம், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், ஜோசியம் ... இப்புடியாப்பட்ட எல்லா புருடா உடற சமாச்சாரமெல்லாம் ... ஒரு கலையாகவும், பொக்கிஷமாவும் ... நெனைச்சிட்டிருந்த காலமொன்னு இருந்திச்சி ... 

ஆனா ... இப்போவெல்லாம் ... புருடா'னு எள்ளி நகையாடற நெலமைக்கு வந்துடிச்சி'னு சொன்னாக்க ... அதுக்கு காரணம் ... அதை முன்னெடுத்து கொண்டு வந்தவங்க ... காசுக்கு ஆசைப்பட்டதாலயும், தான் மட்டுமே சிலாக்கியமா பேசப்படணும்'னு எண்ணத்தாலேயும் ... நல்ல தெறமையான கலையை ... கொஞ்சம் கொஞ்சமாக கொறைச்சி சொல்லி கொடுத்து ... வழி வழியா வளர வேண்டிய கலையானது ... படிப்படியா மங்கி போயி ... ஏளனத்துக்கு ஆளாகி ... குப்பாசு ஆயிடுச்சி

பழைய காலத்துல இப்புடி ஒன்றை வைத்து இன்னொன்னை கண்டு புடிச்சாங்கன்னாக்க ... அதுக்கு ஒரு அடிப்படை சூத்திரம் இருக்கு ... அது என்னான்னா ...
இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன.
சூரியன், சந்திரன், மரம், வீடு, நீங்கள், நான் எல்லாமே தொடர்பு உடையவையே. இவற்றில் ஏதாவது ஒன்றின் சிறு அசைவும் (மன அசைவு உட்பட) இந்த அண்டத்தை முழுவதும் பாதிக்கக் கூடும்

You can not touch a flower, without making thunderous sound, somewhere else in the cosmos !
ஒரு லட்சம் வீரர்கள் கோட்டையைத்
தாக்கினாலும் ஒருவன்தான் கோட்டை மேலேறிக் கொடியைப் பறக்க விடுவான்.
அதைப்போல மனிதர்களில் வெகு சிலர்தான் கடவுளுக்கு அருகில் செல்கிறார்கள்.
அதற்கு ஆன்மிக சாதனை தேவை.
புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது.
இன்பமும், துன்பமும், ஏற்படுகின்ற இந்த வாழ்க்கையில் உய்யுற வழியே இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா?
அந்தக் கேள்விக்கு பதில் தேட தேட ... பிரபஞ்ச அண்ட பிண்டத் தத்துவம் இன்னும் ஆழமாகப் புரிய ஆரம்பிக்கும்.
எங்கு தோற்றமோ? அங்கேதான் முடிவும்

ஆக, வெட்டவெளியில் தோன்றிய ஜோதி அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரை உள்ள பரிணாமத்தைக் மனிதன் கண்டான்

கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னிடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தான்.
எங்கோ தொடங்கிய மூல ஆற்றல்
அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரணமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலைக் கண்டான்.
பிரபஞ்சத்தின் சிறிய அணுவில் ஒன்றாகிய மனிதன் ... மூல சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து
கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின் பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக முடியும் என்று கண்டுபிடித்தான்.
கண்டுபிடித்து அதை அடைந்தவன் சித்தன்!!! 

ஆமாம் ... வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. அதுவே பிரம்மரகசியம் ! அதை அறிந்தவன் பிரம்மரிஷி.
பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை அண்டங்களாக, பிண்டங்களாக நடந்து கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே
(Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம் எனப்படும்

அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும்

இவை இரண்டும் மோதிக் கொள்வதால்
ஏற்படும்போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே நெருப்பாகும்

நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்றபோது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே மண்.
இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப் பிரிவுகள் ஆனபடியால் அவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம்

பூதங்கள் பேரியக்க மண்டலத்தில் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் என்று முறையே தோன்றியது. இதே வரிசைக் கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான குழந்தையும் வளரும்.
அண்டம்: உலகம்
பிண்டம்: குழந்தை
ஆகாயம்: தலைபாகம்
( ஆகாயம்): (ஆக்ஞை)
காற்று: கழுத்து
( காற்று): (விசுத்தி)
நெருப்பு: இருதயம்
( நெருப்பு): (அநாதகம்)
நீர்: தொப்பூள்
( நீர்): ( மணிப்பூரகம்

மண்: வயிறு ... சுக்கில-சுரோணிதம் உள்ள இடம் (மண்): (சுவாதிஷ்டானம்)
அண்டத்தின் செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும் செயல்பாடு நடைபெறுகிறது.
பரமாணுவிலிருந்து தொடங்கி கூட்டம் கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின் குணங்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றோம்

உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின?
இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம் என்றும், ஒலி உண்டாகும் இடத்தை காற்று என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு என்றும், சுவை உண்டாகும் இடத்தை நீர் என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண் என்றும் குறிக்கின்றோம்

எழுவகை பிறப்பு :- 

பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி கொண்ட கோள். அது ஐந்து விதமான அணுக்கூட்டத்தின் தொகுப்பு. இந்த அணு தொகுப்பு பூமி மற்றும் அதிலுள்ள அணுக்களுக்குத் தானே முளைக்கின்ற, செயல்படுகின்ற ஆற்றல் இல்லை.
இது செயல்படுவதற்கு சூரியனின் ஒளிசக்தி ஆற்றல் தேவைப் படுகிறது. சூரியகதிர்களின் வீச்சினால், பூமியில் ஜீவராசிகள் உண்டாயின

ஜடப்பொருளான பஞ்சபூதம்
ஐந்தும் ... அதோடு சூரியன், சந்திரன் என்கிற இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும் ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின.
இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப் பிறக்காமல் ஏன் மனிதன், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி

சூரியனானது தன்னுடைய சூரியக்
குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை கிரகித்து பூமிக்கு அனுப்புவதால் அந்த
ஒளிக்கதிர்கள் பூமியில் படும்போது
பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ
அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப
ஏழு வகையான பிறப்பாக தோன்றியது.
இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத ஆற்றலும், சூரியக் குடும்பங்களின் ஆற்றலும் ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப பிறப்பு பேதங்கள் உண்டாயின

பிறப்பு பேதங்கள் எனப்படுவது மனிதன், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின

பிண்டத்தில் ... உடலின் இயக்கம் எப்படி செயல்படுகிறது

பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்து பூமியாகி செயல் படுகிறதோ அதேபோல் இந்த உடலில் பஞ்சபூதசக்திகள் செயல்படுகின்றன

1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம்
2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல், எழுதல், ஓடல்
3) நெருப்பு – பயம், சோம்பல், பசி, உறக்கம், புணர்ச்சி
4) நீர் – உதிரம், மூளை, உமிழ்நீர், கொழுப்பு, சுக்கிலம்
5) மண் – மயிர், தோல், நரம்பு, எலும்பு, தசை
 
பூமியின் இயக்கத்திற்கு இரவு, பகல் மாறி மாறி சூரிய சந்திரர்கள் செயல் படுவதால் பூமியின் செயலும், ஜீவ ராசிகளும் வாழ்கின்றன

அதே போல மனித உடலான பிண்டத்திலும் இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம் நடை பெறுவதால் மனித பிண்டம் இயங்குகிறது.
பூமியில் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை இரவும் பகலும் மாறி மாறி செயல்படுவது போல் இந்த மனித உடலில் சூரியகலை, சந்திரகலை .... சுவாசம், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி செயல்படும்

ஆகவே சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை எப்படி இயக்குகிறதோ, அதே ஆற்றல் தான் இந்த மனித உடலையும் இயக்குகிறது 
 
பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு:- 

பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம் சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள்.
அதேபோல் மனித உடலில் தலைக்கு
கீழ்ப்பகுதி -பிண்டம் .. தலைப்பகுதி
- அண்டமாகிறது

அண்டத்தில் எழு கிரகம் செயல் படுகின்றன

அதேபோல் பிண்டத்தில் அதாவது தலைப் பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.
கிரகம் என்றால் ... ?
கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள்
என்பதாகும். நமது மனித உடலில்
தலைப்பகுதியில் உள்ள கண் -2 , காது -2 , மூக்கு துவாரம் -2, வாய் -1
ஆக இந்த ஏழு துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை.
கண், காட்சியை கிரகிக்கிறது. வாய், சுவையை கிரகிக்கிறது. ஆக, கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில் உள்ளது போல் பிண்டத்திலும் நடை பெறுவது நமக்குத் தெளிவாகப் புரிகிறது

அடுத்த நிழல் கிரகம் என்று ஏன்

ராகு, கேது என்று இரண்டு கிரகத்தை ஏன் வைத்தார்கள்

ஆய்வு செய்யும்போது பொது நியதிப் படி ஒரு பொருளை கிரகிக்கின்றபோது மற்றொரு புறம் வெளியே தள்ளுகின்ற செயலும் நடைபெற வேண்டும் என்பது விதி.
அந்த அடிபடையிலே தலைப்பகுதியில் கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம், மலம், மூலமாக மனித உடல்
கழிவு வெளியேறுகிறது.
எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின் தலையும், கேது என்றால் பாம்பின் உடலும் வைத்தார்கள் ?
பாம்பின் தலை என்றால் விஷத்தைக்
குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷம் என்பது மலம் என்பது பொருள். மலத்தை தள்ளும் இடமே விஷமாகும்

அதைதான் மனித உடலில் எருவாயை ராகு என்றனர். அதேபோல் கேது என்பது பாம்பின் உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது படைப்புக்கு உரியது

படைப்புக்கு காரணமாவது சுக்கிலம்
என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில் கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு உரியவையாக இருப்பதால் ஞானகாரகன் என்றும் கூறினர்.
மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழுகிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே... நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும் காட்சியளிகிறது

அதேபோல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது உடலிலே சப்த தாதுக்களாகச் செயல்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு செயலிலும் ..
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை. பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை என்றே தெளிவு

ஓம் என்பது?
ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்” என்ற இந்த பிரபஞ்சம் முதன் முதலில் (ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த கனலே. குளிரும்போது அது அணுவாக மாறி இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது.
ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம் என்றால் ஒலி என்று பொருள்.
ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும்
உண்டாகும். இது இயற்கை.
இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான முதல் காரணமாக இருப்பது ஒளியும், ஒலியும் தான்.
அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன், சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான்.
மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை இயங்குகிறது.

எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத் தானே இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி, அதன் அதிர்வு இம் மூன்றும் சேர்ந்ததுதான் மூலசக்தி.
அதைத் தான் சித்தர்கள் அ, ,
ஓம்” என்று பெயர் வைத்து, எல்லா
இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான் காரணம் என்றனர்.
ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூல சக்தி என்பதை கோரக்கர் முதல் கொங்கணர், அகத்தியர், ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக் கொண்டார்கள்.
ஓம்” தான் மூலசக்தி.

பிண்டம் பற்றி ...:
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘ இதன் பொருள் ... உலகத்தில் எது இருக்கின்றதோ, அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.
அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்
 
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை ...
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்). உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறிவிடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது உடலில் இருக்கின்றது.
நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள் இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும். உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.
காற்று - உடல் இயங்க காற்று மிக
முக்கியமானதொன்றாகும். காற்று
இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காமல் உடலால் இயங்க முடியாது.
ஆகாயம் - வெற்றிடம். உடலினுள்
வெற்றிடங்கள் இருக்கின்றன... சுவாசப் பைகள் போன்றவைகள். வெற்றிடங்கள் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.
நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து
இருப்பதனைப் போல மனித உடலும்
நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது. உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி
விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது.
இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தேதான் உடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது

அதாவது,
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :
அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில் உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம், கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம், அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம்,
குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி -பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்-சுவர்க்கம், தோள்-மகாலோகம், முகம்-ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் -சத்தியலோகம், திரிகோணம் -மேரு, கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம், மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம், இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள்-வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு, மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு-கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு, மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர்- புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்-பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை -நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் - தயிர்க்கடல்.
நாதசக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும்
நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் -புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் -சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் -ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் - என்கிறது அபிதான சிந்தாமணி

திருமூலர் கருத்து:
"வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே"
-திருமூலர் – 476
இவ்வண்டத்தின் மேல் பூமியும்
பூமியின்மேல் நீரும், நீரின்மேல்
அக்கினியும், அக்கினியின்மேல்
வாயுவும், வாயுவின் மேல் ஆகாசமும் நிற்கிறது. இது ஒரு அண்டத்தை பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு
அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார்

இனி பிண்ட உற்பத்தி:
"பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே

திருமூலர் – 477
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின் தத்துவமாகும், சளி, ரத்தம் - நீரின் தத்துவமாகும், உடலில் சூடு உண்டாக்குவது அக்கினியின் தத்துவமாகும், நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும். நம் உடலில் அக்கினியானது வாயுவுடன் கூடியே உள்ளே செல்கிறது.
"கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே

-திருமூலர் – 478
அதாவது அண்டமான வெளி மண்டலங்கள் பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை கூறுகிறார்.
பூமி – மாமிசமாகவும்
நீர் – இரத்தமாகவும்
நெருப்பு – நம் உடல் சூடாகவும்.
ஆகாயம் – கேட்டுக்கும் சக்தியாகவும்.
கடல் – வியர்வையாகவும், சிறுநீராகவும்
மாகாமேரு (பூமியின் மேற்பக்கம்) -
கழுமுனையாகவும்
வள்ளலார் கருத்து:
அண்டமும், பிண்டமும், கடவுளும் !
"அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம்
வல்லவராய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !" 

"கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக் கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு
அளவை விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு
நெடுங்காலம் மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார்
ஆங்கே அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக் கண்டாரேல் அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார் இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளிவரை யேனும் துணித்து
அளக்கப் படுமோ !"
நாம் வாழும் அண்டம் போல் பல கோடி அண்டங்கள் உள்ளன. அதில் உயிர்கள், உயிர்கள் வாழும் உடம்புகள், அதற்கு தேவையான பொருள்கள், அதற்கு உண்டான இடங்கள், எல்லாம் இடைவெளி இல்லாமல் நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து
கொண்டும், இடம் கொடுத்துக் கொண்டும், சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல்பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப் பொருள் உண்டு. அது பலகோடி அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல்
பட்டுக் கொண்டு இருக்கின்றது

அது இயங்கும் இயக்கம் இடமானது .... பெரு வெளியில், எல்லா அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம் என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய், ஓங்கி இடைவிடாது செயலாற்றிக் கொண்டுஇருக்கும் தனி ஆற்றல் ஒன்றே!
அதை கடவுள்'னு கூப்புடறதும் ... கூப்புடாம போறதும் அவங்கவங்க இஷ்டம் ...
ஆனா ... அருட்பெருஞ் ஜோதி ... ஒளிக் கடவுளாகும் என்கிறார் வள்ளலார் !!!
----------