ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
ஓசோன் படலத்தின் படம் மற்றும் அதன் முக்கியத்துவம் அதை எவ்வாறு பாது காக்கவேண்டும் என்பது பற்றியும் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலின் துண்களைத் தட்டினால்
ச ரி க ம ப த நி என்கின்ற சப்த ஸ்வரங்கள் கேட்கின்றன.
திருப்பூரில் குண்டடம் வடுக நாத கோவிலில் , 1000 ஆண்டுகளுக்கு முன்பே
கர்பத்தில் உள்ள குழந்தையின் வடிவங்களை (ஒவ்வொரு மாதத்தில் ) வடித்துள்ளனர்
நம் முன்னோர்கள்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது
சூரிய ஒளி மாலை போல் மூன்று வேளையும் விழும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.
இக் கோயில் 5000 ஆண்டுகள் பழைமையானது.
யாழி எனும் மிருகத்தின் உருவத்தை பல கோயில்களில் காணலாம்.
இதுவும் டைனோஸர் போன்று வாழ்ந்து மறைந்தவை என்று கூறப்படுகிறது .
சில கோவில்களில் இச்சிலையின் வாயில் உருண்டையான கல் (பந்து போல )
இருக்கும் . இதை உருட்ட முடியும். ஆனால் உருவ முடியாது.
தஞ்சையில் உள்ள கங்கை கொண்ட சோழ புரம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது .
அக்கோவில் கிணற்றின் அருகில் சிங்க உருவசிலையும் அதன் முன் வாயிலும் இருக்கும்.
அதன் வழியே உள்ளே சென்றால் கிணறு போன்று அமைப்பு இருக்கிறது. அதில் குளிக்கலாம். ஆனால் வெளியில் இருப்பவருக்கு தெரியாது. அரச குல பெண்கள் குளிப்பதற்காக கட்டப்பட்டது என்கிறார்கள்.
இதே போல் இக்கோவிலின் கருவறையில் சுவர்களில் மரகத கற்கள் பதித்துள்ளனர். இதனால் வெளியில் வெயில் என்றால் உள்ளே குளிரும். வெளியில் குளிர் மழை என்றால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
இப்போதைய விஞ்ஞான வளர்ச்சியும்,அறிவியலும் எத்தனையோ கட்டிடங்களை கட்டிவிடமுடியும். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் , 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய (கரிகாலன்) கல்லணையும் மிஞ்சும் கட்டிடக் கலை இப்போது முடியுமா ?
வாழ்க தமிழ் ! வளர்க தமிழனின் புகழ்!
(சில சேகரிப்புகள்)...
No comments:
Post a Comment