மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- ஷாந்தனுவாய் ....
சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில்
மாட்டிடுவாய்
- கங்கை மைந்தனாய் ......
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்
-பாண்டுவாய் ......
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
-சகுனியாய் .....
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
-குந்தியாய் .....
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
- திருதுராஷ்டிரனாய் .....
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
-கௌரவர்களாய் .....
கூடா நட்பு கேடாய் முடியும்
-கர்ணனாய் ......
சொல்லும் வார்த்தை கொல்லும் ஒரு நாள்
-பாஞ்சாலியாய்....
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய் .......
பலம் மட்டுமே பலன் தராது
பீமனாய் .....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
-அர்ஜூனனாய் ....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகதேவனாய் .......
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
-அபிமனியுவாய் ......
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கினான்
-கண்ணனாய் .....
வாழ்க்கையும் ஒரு பாரதம் தான் ...வாழ்ந்து பார்ப்போம் ....
-
No comments:
Post a Comment