கி. பி 1812 முதல் 1828 வரை மதுரையின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவர் ரோஸ் பீட்டர் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.
திரு பீட்டர் அவர்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் எல்லா மதத்தினரையும் மதிப்பவராக விளங்கினார். இவரே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். இவரின் அரிய குணங்களைக் கண்டு மக்கள் இவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தார்கள்.
மீனாட்சி அம்மன் ஆலயம் இவர் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே அமைந்திருந்தது. தினமும் அவ்வழியாக அலுவலகத்துக்கு செல்லும் போது , திரு. பீட்டர் தன்னுடைய காலணிகளை கழற்றி விட்டு கோயிலை கடந்த பிறகு மீண்டும் அணிந்து குதிரையில் செல்வார். தினமும் இதை கடைபிடித்து வந்தார்.
ஒரு நாள் இரவு நல்ல மழை. திரு பீட்டர் அவர்கள் தன் பங்களாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காதில் விழுந்த கொலுசு சத்தம் அவரின் உறக்கத்தைக் கலைத்தது.கொலுசு சத்தம் அவருக்கு மிக அருகில் வர, விழித்து நோக்கிய போது, சிறு பெண் பட்டு பாவாடை மற்றும் விலையுர்ந்த பொன்னாபரணைகளுடன் காலில் கொலுசு அணிந்து மிக அருகில் நிற்கக் கண்டார்.
அச் சிறுமி அவரை நோக்கி "பீட்டர் என் பின்னால் வா' என்றழைத்து விட்டு நடக்க ஆரம்பித்தது. கால்களை நோக்கிய பீட்டர் அச் சிறுமி காலணிகள் அணியவில்லை என்பதை உணர்ந்தார். கொலுசு மட்டும் அணிந்திருந்த கால்களின் நடையைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெகு தூரம் வந்து விட்டார்.திடுக்கிட்ட பீட்டர் அவர்கள் சற்று திரும்பி வீட்டை பார்த்த போது, வீடு முற்றும் வெள்ளம் அடித்துச் செல்வதை பார்த்து அதிர்ந்து நின்றவர் முன்னாள் நடந்து சென்ற சிறுமியை நோக்கினார். என்ன ஆச்சிரியம் .....அங்கு அச்சிறுமியை காணவில்லை...
அன்னை மீனாட்சி தான் சிறுமியின் உருவில் வந்து தன்னை காப்பாற்றியதை உணர்ந்தார் திரு பீட்டர். சிறுமி உருவத்தில் வந்த மீனாட்சி காலணி அணியவில்லை என்பதை மனதிற்கொண்டு பொன்னாலான காலணிகளை காணியாகையாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கினார்.அக்காலணியில்
412- ரூபி
72 - எமரால்டு
80 - வைரங்கள்
பாதிக்கப்பட்டிருந்தன.
இது நடந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மன் அக்காலணிகளை அணிந்து இன்றும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்காலணிகள் "பீட்டர் பாதுகை " என்றே அழைக்கப்படுகிறது.
பக்திக்கு மதம் தடையில்லை ..... உணர்வார்களா ... இன்றிருப்பவர்கள்....
No comments:
Post a Comment